திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும்கிட்டிச்சேரஎன்ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்
இன்னும் கிட்டக்கிட்டச் சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா இன்னும் கிட்டக்கிட்டச்
சேர்த்துக் கொள்ளுமேன் ஜீவன் தந்த ரட்சகா
2.என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமே
3 .திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய்ச் சந்தோஷமாகிறேன்
4. இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்விய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்