தாசரே
இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்கு
சொந்தமாக்குவோம்
நேசமாய்
இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம்
மாவிருள்
நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்
1.வருத்தப்பட்டுப்
பாரஞ் சுமப்போரை
வருந்தியன்பாய்
அழைத்திடுவோம்
உரித்தாய்
இயேசு பாவபாரத்தை
நமது
துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே
(2)
2.பசியுற்றோர்க்கும்
பிணியாளிகட்கும்
பட்சமாக
உதவி செய்வோம்
உசிதநன்மைகள்நிறைந்துதமை
மறந்து
இயேசு
கனிந்து திரிந்தனரே (2)
3.நெருக்கப்பட்டு
ஒடுக்கப்பட்டோரை
நீசரை
நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா
கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள்படு
குழிக்குள்விழுந்தனரே
4.இந்து
தேச மாது சிரோ மணிகளை
விந்தை
யொளிக்குள் வரவழைப்போம்
சுந்தர
குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் ர்ந்து
சிறந்திலங்கிட
5.மார்க்கம்
தப்பி நடப்போரைச்
சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக
ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம்
உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்