Type Here to Get Search Results !

Tamil songs - 302 - Vaanil Ekkaalam Mulankidavey

வானில் எக்காளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமே
இயேசுவின்இராஜ்ஜியம்நெருங்கிடுதே

ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே (2)

2.கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்

3.மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்

4.பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்
தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார்

5.மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தம் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க

ஆயத்தம்  விரம் அடைந்திடுவோம்