Type Here to Get Search Results !

Tamil Song - 347 - Aaviyai mazhaipoola

ஆவியை மழைபோல யூற்றும்
பல சாதிகளை யேசு மந்தையிற்கூட்டும்
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

1.அன்பினால் ஜீவனைவிட்டீர் - ஆவி
அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும்

2.சிதறுண்டலைகிற ஆட்டைப் பின்னும்
தேடிப்பிடித்து நீர் தூக்கிச் சுமந்து - பதறாதே
நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல்வாழ்க்கையருளும்

3.காத்திருந்த பல பேரும் - மனங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திர கீதங்கள்
பாடிப் புகழ்ந்து சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும்

4.தோத்திரக் கீதங்கள் பாடி- எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே
நிதம் நிதம் தேடிப் பாத்திரராக
அநேகரெழும்பப் பரிசுத்த ஆவியின்

அருள்மாரி ஊற்றும்