தீய
மனதை மாற்ற வாரும், தூய
ஆவியே - கன
நேய
ஆவியே
1. மாயபாசத்
தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்
- மிக மாயும்
பாவி
நான் --- தீய
2. தீமை
செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே - மருள்
தீர்க்கும்,
தஞ்சமே --- தீய
3. பரத்தை
நோக்க மனம் அற்றேனே, பதடிதான்,
ஐயா - ஒரு
பாவி
நான் ஐயா --- தீய
4. ஏக்கத்தோடென்
மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே
- தினம்
இதயம்
அஞ்சவே --- தீய
5. புதிய
சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே
- அதைப்
புகழ்ந்து
காக்கவே --- தீய
6. கிறிஸ்து
மீது நாட்டங் கொண்டு கீதம்
பாடவே - அவர்
கிருபை
தேடவே --- தீய
7. தேவ
வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே - மிகு
தெளிவு
வேண்டவே --- தீய
8. ஜெபத்தின்
தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே
- மிக
சிறப்பாய்
ஏற்றவே --- தீய