Type Here to Get Search Results !

Tamil Song - 326 - Enathu Raajareega

எனது கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ வருகுமோ ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ பெருகுமோ ?

மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே --- எனது

1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது

2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே --- எனது

3.ஜாதிகட்குக் கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்;
சகலரும் அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து சூழுவார்;
நீதியாய்த் தானே மேசியா எங்கும் ஆளுகை செய்வார்,
நித்தம் பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார்

4.எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே

5.சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே;

நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே!