எனது
கர்த்தரின் ராஜரீக நாள்
எப்போ
வருகுமோ ?
ஏங்கும்
என் கலி நீங்க மகிழ்ச்சி
எப்போ
பெருகுமோ ?
மனிதசுதனின்
அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு
மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே
--- எனது
1. தேவ
தூதரின் கடைசி எக்காளம் தொனி
முழங்கவே ,
ஜெகத்தில்
ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே
,
ஜீவனுள்ளோறும்
அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில்
பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே --- எனது
2. தூதர்
எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை
காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக
மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
;
பாவ
மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான்
என்றாரே --- எனது
3.ஜாதிகட்குக்
கொடியாய் ஈசாயின் வேரன் றேறுவார்;
சகலரும்
அவர் கொடியின் கீழ் வந்து பணிந்து
சூழுவார்;
நீதியாய்த்
தானே மேசியா எங்கும் ஆளுகை
செய்வார்,
நித்தம்
பிரபுக்களும் நியாயமாய்த் துரைத்தனம் செய்வார்
4.எருசலேமி
லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே,
ஏழைகள்
மன மகிழ்ந்து கர்த்தரை ஏத்திப் பாடுமே;
வருஷமாயிரம்
அளவும் பூமியில் பலன்கள் நீடுமே;
வானராச்சிய
சேனைகள் யாவும் வந்து கூடுமே
5.சஞ்சலங்களும்
தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே;
சந்தோஷத்தோடு
மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே;
நெஞ்ச
மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே;
நித்திய
ஜீவனைப் பெற என்றன் மனம்
துடிக்குமே!