அதிசயமான
ஒளிமய நாடாம்
நேசரின்
நாடாம் நான் வாஞ்சிக்கும் நாடாம்
- என் (2)
1.பாவம்
இல்லாத நாடு
ஒரு
சாபமும் காணா நாடு (2)
நித்திய
மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில்
ஓசன்னா - அல்லேலூயா
2.சந்திர
சூரியன் இல்லை
ஆனால்
இருள் ஏதும் காணவில்லை
தேவ
குமாரன் ஜோதியில் ஜோதி
நித்திய
வெளிச்சமாவார் -என்றும் பகல்
3.வித
விதக் கொள்கை இல்லை
பல பிரிவுள்ள பலகை இல்லை (2)
ஒரே
ஒரு குடும்பம்
ஒரே
ஒரு தலைவர் எங்குமே
அன்புமயம்
அன்புள்ளோர் செல்லும்
4.பிரச்சனை
ஏதும் இல்லை
வீண்
குழப்பங்கள் ஒன்றுமில்லை (2)
மொழி
நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே
அங்கு இல்லை
அன்பே
மொழி
5.இயேசுவின்
இரத்தத்தினால்
பாவம்
கழுவினால் செல்லலாமே (2)
இத்தனை
பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில்
எவரும் வேண்டாம் இன்றே வாரீர்!