Type Here to Get Search Results !

Tamil Song - 291 - Sinthanaip padaathey Nenjamey

சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-
உனை ரட்சித்த தேவ சுதன் இருக்கிறார்
அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே - சிந்தனை

1.ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும்,
அங்கதில்ஒன்றும்தரையிலேவிழாதென்று உத்தமன் உரைத்திருக்க!
புத்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று....

2.சோங்கில் அயர் சீடரின்முன் பாங்குடன்
தயவளித்துத் தாங்கினோர் உனையும் வந்து தாங்குவார்,
என வந்தாலும், ஓங்கும் இஸ்ரவேல் ராசன் தூங்கவும் இல்லையே,
சும்மா ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று...

3.எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம்
ஜெயம் கொண்டு அத்தனின் வலத்தில் நித்திய
துத்தியத் திருந் தரசாள் கர்த்தனாம்
கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்

தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு....