பயப்படாதே
பாரிலிப்போதே
திகையாதே
கலங்காதே
தெரிந்து
கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து
கொண்டேன் நீ என்னுடையவன்
1.தண்ணீரை
நீ கடக்கும் போது
உன்னோடு
கூட நானிருப்பேன்
ஆறுகளை
நீ கடக்கும் போது
அவைகள்
உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே
2.அக்கினியில்
நீ நடக்கும் போது
அஞ்ச
வேண்டாம் வேகாதிருப்பாய்
அக்கினி
ஜீவாலை உன்னைப்பற்றாது
விக்கினங்கள்
ஏதும் சுற்றாது !
3.இஸ்ரவேலின்
பரிசுத்தர் நானே
இரட்சகராம்
தேவனும் நானே
உன்னை
மீட்க நான் வந்தேனே
கண்மணி
போல் அருமையானவனே – பயப்படாதே
4. உன்னை
நானே உருவாக்கினேனே
அன்னை
போலவும் ஆதரிப்பேனே
கண்மூடாமலும்
காத்திடுவேனே
சொன்னதை
நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே
5.முந்தினதை
நினைக்க வேண்டாம்
பூர்வமானத்தை
சிந்திக்க வேண்டாம்
எந்த
துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம்
வாக்குகளையும்
விட்டிட வேண்டாம் – பயப்படாதே
6. ஒன்றுக்கும்
நீ கவலைப்படாதே
என்றும்
ஜெபத்தையும் தவறவிடாதே
கடந்த
தோல்வியை எண்ணி விடாதே
நடந்திடும்
வழிகளையும் விடாதே – பயப்படாதே
7.அல்லேலூ
யாவுக் கருகனே
அல்லும்
பகலும் ஆதரிப்பேனே
அல்பா
ஒமெகா நான் தானே
வல்ல
கரத்தால் நடத்துவேனே!