Type Here to Get Search Results !

Tamil Song - 271 - Manamirankum Deivam Yesu

மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்

 யேகோவா ரஃப்பா.....இன்று
சுகம் தரும் தெய்வம் இயேசு
 சுகம் இன்று தருகிறார் (யாத் 15: 26)

1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் ‍- ‍மாமி
கரத்தை பிடித்து தூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று - அவள்
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் (மத் 8 :14,15)

2. குஷ்டரோகியை கண்டார் - இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு - என்று
சொல்லி சுகசத்தைத் தந்தார் (மத் 8:23)

3. நிமிர முடியாத கூனிஅன்று
இயேசு அவளைக் கண்டார்
 கைகள் அவள் மேலே வைத்தார் - உடன்
 நிமிர்ந்து துதிக்கச் செய்தார் (லூக் 13 : 11-13)

4. பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
இயேசு பின்னே நடந்தான் (மாற் 10 : 47-52)

5. கதறும் பேதுருவைக் கண்டு - இயேசு
 கரங்கள் நீட்டிப் பிடித்தார்
 படகில் ஏறச் செய்து - அவர்

கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் (மத் 14 : 30-34.)