சிலுவையில்
நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப்
பாரிடுவேன் – ஆ ஆ
சிலுவையின்
அன்பின் மறைவில்
கிருபையின்
இனிய நிழலில்
ஆத்தும
நேசரின் அருகில்
அடைகிறேன்
ஆறுதல் மனதில் – சிலுவையில்
பாவப்
பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென்
ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை
வந்ததினால்
சிறந்த
சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது
மேலோகில்
ஏகுவேன்
பறந்தே வேகம் – சிலுவையில்
எவ்வித
கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை
சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில்
வியாகுலம் வந்தால்
அவரையே
நான் அண்டிக் கொண்டால்
அலைமிக
மோதிடும் அந்நாள்
ஆறுதல்
அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்
இன்பம்
சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள்
மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை
இன்னிசை நாதம்
தேனிலுமினிய
வேதம்
தருமெனக்கனந்த
சந்தோஷம்
தீர்க்குமென்
இதயத்தின் தோஷம் – சிலுவையில்