Type Here to Get Search Results !

Tamil Song - 241 - Siluvaiyil Nizhalil Anuthinam

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன்

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்சிலுவையில்

பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்சிலுவையில்

எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன்
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்சிலுவையில்

இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்

தீர்க்குமென் இதயத்தின் தோஷம்சிலுவையில்