இம்மட்டும்
ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த்
ஸ்தோத்தரிப்போமாக
நம்மை
ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த்
தந்து
நற்சுகம்
மேவவும் அற்புதமாகவும். --- இம்மட்டும்
1. காலம்சொல்
போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப்
போலேயும் ஒழியும்;
வாலிபமும்
மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின்
வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
கோலப்
பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே
கொண்ட
உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு
கருணைகள் விண்டு தயவுடன். ---- இம்மட்டும்
2. பலவித
இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
பரம
பாதையைத் தொடர்ந்தோம் ;
வலிய
தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம்
,
வஞ்சர்
பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற
தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த
மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து
கெடவும் ஆராய்ந்து நெறியுடன் --- இம்மட்டும்
3. சனசேதம்
வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து
, நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய்
ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி
எல்லார்மேல் அன்றன்று
தினமும்
அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை
யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால்
எங்களை இந்த வினோதமாய் --- இம்மட்டும்