அவர்
புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
1.என்னோடே
ஆண்டவரை
மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து
அவர்
நாமம் உயர்த்திடுவோம்
களிகூர்ந்து
நன்றி சொல்வோம்-2
2.ஆண்டவரைத்
தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித
பயத்தினின்று விடுவித்தார்
3.அவரை
நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது
முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
4.ஏழை
நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள்
அனைத்தினின்றும் விடுவித்தாரே
5.கர்த்தர்
நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை
நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
6.ஆண்டவரில்
என் ஆன்மா மேன்மைபாரட்டும்
சிறுமையுற்றோர்
அதைக் கேட்டு அக்களிப்பார்கள்