மனதுருகும்
தெய்வமே ஏசையா
உம்மை
மனதாரத் துதிப்பேன்
ஸ்தோத்தரிப்பேன்
நீர்
நல்லவர் சர்வ வல்லவர்
உம்
இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம்
அன்பிற்கு அளவே இல்லை
அவை
காலை தோறும் புதிதாயிருக்கும்
1.மெய்யாக
எங்களது பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை
சுமந்துகொண்டீர் ஐயா
2.எங்களது
மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால்
சுகமானோம் உந்தன்
3.தேடி
வந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய்
தினம்
தினம் அற்புதம் செய்தீர் ஐயா
4.சாபமான
முள்முடியை தலைமேலே
சுமந்து கொண்டு சிலுவையிலே
வெற்றி சிறந்தீர் ஐயா