உம்மை
உயர்த்தி உயர்த்தி
உள்ளம்
மகிழுதையா
உம்மை
நோக்கிப் பார்த்து
இதயம் துள்ளுதையா
1.கரம்பிடித்து
நடத்துகிறீர்
காலமெல்லாம்
சுமக்கின்றீர்
நன்றி
நன்றி (4) - உம்மை
2.கண்ணீரெல்லாம்
துடைக்கின்றீர்
காயமெல்லாம்
ஆற்றுகிறீர்
3.நல்லவரே
வல்லவரே
காண்பவரே
காப்பவரே
4.இருப்பவரே
இருந்தவரே
இனிமேலும்
வருபவரே
5.வலுவூட்டும்
திருஉணவே
வாழ
வைக்கும் நல்மருந்தே!