துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை
1.வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார்
2.மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
தூய்மை நிறைந்த பார்வை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார்
3. வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த வாழ்வு தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த ஜீவியம் தந்தார்
4. சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒளி நிறைந்த வழி திறந்தார்