Type Here to Get Search Results !

Tamil Song - 77 - Thoththiram Seiveyney

தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக இம்மாத்ரம் கருணை வைத்த பார்த்திபனை
யூதக்கோத்திரனை என்றும்

1.அன்னை மரி சுதனை - புல் மீது
அமிழ்துக் கழுதவனை (3)
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை

2.கந்தை பொதிந்தவனை வானோர்களும்
வந்தடி பணிபவனை (3)
மந்தையர்க் கானந்த மாட்சியளித்தோனை
வானபரன் என்னும் ஞானகுணவானை

3.செம்பொன் னுருவானைத்
தேசிகர்கள் தேடும் குருவானை (3)
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு

அன்பு பெற நின்று, பைம்பொன் மலர் தூவி