தந்தானைத்
துதிப்போமே – திருச்
சபையாரே
கவி – பாடிப்பாடி
தந்தானைத்
துதிப்போமே
விந்தையாய்
நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர்
நன்மை மிக மிக (2) – தந்தானை
1.. ஒய்யாரத்துச்
சீயோனே – நீயும்
மெய்யாகக்
களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச்
சீயோனே
ஐயனேசுக்குனின்
கையைக் கூப்பித் துதி
செய்குவையே
மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை
2.கண்ணாரக்
களித்தாயே – நன்மைக்
காட்சியைக்
கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக்
களித்தாயே
எண்ணுக்கடங்காத
எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற்
சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை
3.சுத்தாங்கத்து
நற்சபையே – உனை
முற்றாய்க்
கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து
நற்சபையே
சத்துக்
குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச்
சிந்தி எடுத்தே உயிர் வரம்
(2) – தந்தானை
4. தூரம்
திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக்
கரத்தினிலேந்தி
தூரம்
திரிந்த சீயோனே
ஆரங்கள்
பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன்
மணவாட்டி யாக்கினது என்னை! (2) – தந்தானை
5. சிங்காரக்
கன்னிமாரே – உம்
அலங்காரக்
கும்மி அடித்துப் படித்து
சிங்காரக்
கன்னிமாரே
மங்காத
உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி
வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை