Type Here to Get Search Results !

Tamil Song - 3 - Maalaiyil Thuthippom

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே மனக் களிப்புடனே
மாண்புகழ் இயேசுவை  வானவரோடே

1.காலை மாலை உறங்கா நேரம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரேமாலை

2.கிருபையின் வாக்கு தந்தாரேஅதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரேமாலை

3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்கச் செய்தாரேமாலை

4.அழைத்த மெய் அழைப்பிலே தானேநாம்
உழைத்திட பெலன் தந்ததேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானேமாலை

5.வயல் நிலம் ஏராளம் காட்டிஅதின்
அறுவடை தாராளம் ஏற்றி
அறிக்கட்டோடே வர கிருபை செய்தாரேமாலை

6.ஆணி துளைத்திடதானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத்தானேமாலை

7. ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப்போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம்மாலை