Type Here to Get Search Results !

Tamil Song - 33 - Aananthamaai naamey

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
அருமையாய் இயேசு நமக்களித்த
அளவில்லா கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில்
ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி பொங்கிடுதே
என் உள்ளத்திலே பேரன்பின் பெரு வெள்ளமே

2.கருணையாய் இதுவரை கைவிடாமலே
கண்மணிபோல் எம்மை
காத்தாரே கவலைகள்நீக்கி
கண்ணீர்துடைத்தார்  கருத்துடன் பாடிடுவோம்

3.படகிலே படுத்து உறங்கினாலும்
கடும்புயல் அடித்து கவிழ்ந்தாலும்
கடலையும் காற்றையும் அமர்த்தி
எம்மை காப்பாரே அல்லேலூயா

4.யோர்தானைக் கடப்போம்
அவர் பெலத்தால் எரிகோவைத் தகர்ப்போம்
அவர் துதியால் இயேசுவின் நாமத்தில்
ஜெயம் எடுத்தே என்றென்றுமாய் வாழுவோம்

5.பரிசுத்த வான்களின் பாடுகளெல்லாம்
அதி சீக்கிரத்தில் முடிகிறதே
 விழிப்புடன் கூடி தரித்திருப்போம்

விரைந்தவர் வந்திடுவார்