துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே
1.புது ஜீவனால் எம்மை புதுமையாய்
மாற்றும்திருச் சித்தம் செய்திடவே - உம்
மகிமையின் ஆவியால் நிறைந்தே
மகிழ மாதயவீந்திடுமே
2.கடும் புயல்களிலே கலங்கிடாதெம்மை
காத்திடும் கர்த்தர் அவர் - திரு
கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து
மனமதை தேற்றினாரே
3.சுத்தர்களுடனே சீர்பொருந்திடவே
நித்தமும் கிருபை ஈந்தார் - தம்
ஜீவனையீந்து சாவினை ஜெயித்து
சேயராய் மாற்றினாரே
4.சிலுவை சுமந்தவர் பின்சென்றிடுவோம்
சேவையும் செய்திடவே - உயர்
பெலமதை யீந்து பயமதை நீக்கி
பறந்திட கிருபை செய்தார்
5.அவர் வரும் வேளையை
அனுதினம் நோக்கி ஆயத்தமாகிடுவோம்
எம்மை அழைத்தவரே கரம் பிடித்தவரே
என்றும் அன்புடன் நடத்திடுமே