Type Here to Get Search Results !

Tamil Song - 24 - Inpa Yesuvin


இன்ப இயேசுவின் இணையில்லா
நாமத்தை புகழ்ந்து இகமதில்
பாடிட தருணமிதே இயேசுவை  போல்
நல் நேசரில்லை இன்றும்
என்றென்றும் அவர் துதி சாற்றிடுவேன்

1.நித்தியமான பர்வதமே உந்தனில் நிலைத்திருப்பேன்
நீங்கிடாதென்னை தோளின் மேல் சுமந்து
நித்தம் நடத்துகிறீர் என்னையும் உம் ஜனமாய் நினைந்தே
உன்னத வெளிப்படுதல் நிறைவாய்

2.பாவத்தில் வீழ்ந்து மாயையிலே
ஆழ்ந்து நான் மாய்கையிலே பரிந்து தேவ அன்பினைகாட்டியே 
பட்சமாய் நீர் பாரில் பரிசுத்ராகுதற்காய்
மிக பரலோக நன்மைகளால் நிறைத்தீர் 

3.மானானது நீரோடைகளை 
வாஞ்சித்து கதறுமாப் போல் என் ஆத்துமா
உம்  பொன் முகம்  காணவே வாஞ்சித்துக் கதறிடுதே
வானிலும் இந்த பூவிலும் நீர் என் வாஞ்சைகள் தீர்பவராய் நினைந்தே

4.சீயோனிலே நீர் சிந்தை சேர்ந்தொன்றாய்
கட்டுதர்காய் திவ்ய அபிஷேகம் தந்தெம்மை நிறுத்தினிரே
சுத்தருடன் சேதம் வராமல் காத்ததினால்
சேவிப்பேன் நித்திய நித்தியமாய்

5.ஆர்பரிப்போடே ஸ்தோத்தரிப்போமே 
அன்பரை உளங்கனிந்தே அளவில்லாத ஜீவனை அளித்தே 
அற்புத ஜெயம் நீரே அல்லேலுயா துதி கனமகிமை

உம் நமத்திற்கே நிதம் சாற்றிடுவோம்