Type Here to Get Search Results !

Tamil Song - 11 - Puththam Puthiaya Paadal Lyrics


புத்தம் புதிய பாடல் தந்தார்
நித்தம் அவரை துதித்திடவே

1. காலையில் கூவிடும் பறவைகளும்
மாலையில் கூப்பிடும் விலங்குகளும்
இன்பமாய் இயேசுவை துதிக்கின்றன
என்னையும் துதித்திட அழைக்கின்றன

2. மரங்களில் மோதிடும் தென்றல்
காற்றும் பாறையில் மோதிடும் கடலலையும்
துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன
என்னையும் துதிக்க அழைக்கின்றனர்

3.காகங்கள் கரைந்திடும் குரலை கேட்டு
படைத்தவர்  மகிழ்ந்திடும் வேளையிலே
பாவி என் பாடலின் துதி கேட்டு
என் தேவன் களித்திட மகிழ்வேன் நான்

4.உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை
உண்மையாய் துதித்திட முடியவில்லை
கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்

இன்பமாய் இயேசுவை துதித்து வாழுவேன்